1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala says about jayalalitha and election

ஜெயலலிதா இல்லாமல் நான் போடும் முதல் ஓட்டு! – சசிக்கலா வருத்தம்!

Tamilnadu
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வரும் நிலையில் ஜெயலலிதா இல்லாமல் தான் முதன்முறையாக வாக்களிப்பதாக சசிக்கலா தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் பலர் காலை முதலே ஆர்வமாக தனது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

சென்னை தி.நகரில் உள்ள வித்யோதயா பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தில் சசிக்கலா தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தற்போது ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக  வாக்களிக்கிறேன். இது கஷ்டமான சூழல். ஆளும் கட்சி நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும். அராஜம் செய்யக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தாமதமான சாவடிகளில் நேர நீட்டிப்பா? – மாநில தேர்தல் ஆணையர் விளக்கம்!