1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (17:37 IST)

மைனர் பெண்ணோடு காதல்… கண்டித்த சகோதரரைக் கொலை – இளைஞரின் கொடூர செயல்!

சேலம் அருகே தன் சகோதரியைக் காதலித்த இளைஞரோடு ஏற்பட்ட மோதல் காரணமாக அருள்குமார் என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் செலவடை அருகே மாரிவளவை சேர்ந்தவர் அருள்குமார். இவரது சித்தப்பா மகள் பாஸ்கர் என்ற இளைஞரைக் காதலித்துள்ளார். ஆனால் அந்த பெண் 18 வயது நிரம்பாத மைனர் என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அருள்குமாருக்கும் பாஸ்கருக்கும் இடையே விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்ற அந்த பெண் பெற்றோர் போலிஸில் புகார் அளித்ததும் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இதெற்கெல்லாம் காரணம் அருள்குமார்தான் என நினைத்த பாஸ்கர் தனது நண்பருடன் சென்று அவரை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருள்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள் ஹேம்நாத் ஆகிய இருவரும் போலீஸில் சரணடைந்துள்ளனர்.