1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (14:24 IST)

கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்: ஆளுனர் ஒப்புதல்..

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கேஸ் சிலிண்டருக்கு ரூபாய் 300 மற்றும் ரூபாய் 150 மானியம் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
 
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தல 300 ரூபாய் மானியம் மற்றும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 150 மானியம் வழங்க சமீபத்தில் புதுவை அரசு முடிவு செய்தது. 
 
இது குறித்த கோப்பு தற்போது துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் வந்துள்ள நிலையில் அதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே இனி புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூபாய் 300 மானியமும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 150 மானியமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran