வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (20:22 IST)

ரெட் அலர்ட் இல்லை; ஆனால் மழை பெய்யும்! – வானிலை மையம்!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் தமிழக மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்தது. முக்கியமாக திண்டுக்கல் மற்றும் தென் தமிழக பகுதிகளில் அதிகமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டதால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையின் திசை வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ரெட் அலர்ட் விளக்கி கொள்ளப்படுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். ரெட் அலர்ட் இல்லையென்றாலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பலமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.