வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 8 மே 2019 (21:30 IST)

13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு : தேர்தல் ஆணையம் அதிரடி

தருமபுரி 8, தேனி 2, திருவள்ளூர் ,கடலூர் ,ஈரோட்டில் தலா 1 என 13 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தற்போது தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 19 ஆம் தேதி 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் தமிழகத்தில் வரும் 19 ஆம் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மறுபடியும் 13 வாக்குச் சாவடிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று இந்தியத்தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 
 
இதற்கு முன்னதாக தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சாஹூ 16 தொகுதிகளுக்கு மறுபடி தேர்தல்நடைபெறலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.