1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 டிசம்பர் 2021 (13:05 IST)

கல்லூரி மாணவர் மணிகண்டனின் உடலை மறுகூராய்வு செய்ய வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மணிகண்டன் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என பாஜக உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் காவல்துறையினரால் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் கல்லூரி மாணவர் மணிகண்டனின் உடலை மறுகூராய்வு செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
மறுகூராய்வு மணிகண்டன் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.