தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் பாம்பன் பாலத்தில் விபத்து; மோதிக் கொண்ட அரசு பேருந்துகள்!
- பாம்பன் பாலத்தில் பஸ் விபத்து; கவிழ்ந்த பேருந்தை கயிறு கட்டி காப்பாற்றிய மக்கள்!
- ராமேஸ்வரத்தை அடுத்து குடும்பத்துடன் காசி சென்ற ஓபிஎஸ்: கட்சிக்காக வேண்டுதலா?
- நடிகர் விஜய் - ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்
- இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது: இலங்கைக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்!
பாம்பன் தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு; மண்டபத்தில் ரயில் நிறுத்தம்!
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னையிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் சென்று கொண்டிருக்கும் நிலையில் பாம்பன் பாலத்தின் வழியாகத்தான் ராமேஸ்வரம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தூக்கு பாலத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற நிலையில் மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
