1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 18 அக்டோபர் 2023 (18:00 IST)

இன்னும் சில மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Rain
தமிழ்நாட்டில் இன்னும் சில மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

கடந்த சில நாட்களாக கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பரவலாக பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று நாள் நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்தில் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சட்டமா இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை அறிவிப்பு தெரிவித்துள்ளது.

மேலும் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran