தொடர்புடைய செய்திகள்
- கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் அதிர்ச்சி..!
- மணிப்பூர் விவகாரம்.. சென்னை கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!
- அக்காவின் மரணத்தில் குத்தாட்டம் போட்ட தங்கை....
- ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை: 10 மாவட்டத்தில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
- ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்; 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
இன்னும் சில மணி நேரத்தில் கொட்டப்போகுது கனமழை: எந்தெந்த மாவட்டங்கள்..?
தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தி.மலை, விழுப்புரம், அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran
