1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (16:40 IST)

காலாண்டு விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்!

students
ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை உள்பட காலாண்டு விடுமுறை கடந்த சில நாட்களாக விடப்பட்டிருந்த நிலையில் விடுமுறை முடிந்து நாளை முதல் மீண்டும் பள்ளி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழ்நாட்டில் காலாண்டு தேர்வு கடந்த மாதம் நடந்தது என்பதும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை விடுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
இந்த நிலையில் நாளை முதல் 6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து மாணவர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva