1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 8 அக்டோபர் 2022 (15:37 IST)

கோடை விடுமுறையை குறிவைக்கும் பொன்னியின் செல்வன் பார்ட் 2… இதுதான் தேதியா?

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 6 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து இப்போது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளாராம் இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிரத்னம்.