வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (16:36 IST)

பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட முதல் குறிப்பு என்ன தெரியுமா??

திமுக  பொதுச்செயலாளர் துரைமுருகன் பதவியேற்று தனது முதல் அறிக்கையை வெளிட்டுள்ளார்.  
 
ஆம், துணைப் பொதுச் செயலாளராக பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஒருவருக்கு ஒரு பதவி என்கிற அடிப்படையில் தனது மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். இதனையடுத்து, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராக நா.புகழேந்தி நியமிக்கப்படுகிறார். 
 
அதேபோல மாவட்ட அவைத் தலைவராக ம.ஜெயச்சந்திரனும், துணைச் செயலாளராக டி.என்.முருகனும் நியமிக்கப்படுகிறார்கள் என்று திமுக  பொதுச்செயலாளர் துரைமுருகன் பதவியேற்று தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.