தொடர்புடைய செய்திகள்
- ஜெயம் ரவி படத்துக்கு 100 கோடி பட்ஜெட்டா? மீண்டும் இணையும் ‘கோமாளி’ கூட்டணி!
- ''முதல்வர் முக.ஸ்டாலின் மற்றும் அமைச்சருக்கு நன்றி'' - நடிகர் கார்த்தி அறிக்கை
- அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!
- வேளாண்மை பட்ஜெட் வேதனையின் விழும்பிற்கு தள்ளும் வகையில் அமைந்துள்ளது-டிடிவி. தினகரன்
- முதல்வர் முக. ஸ்டாலின் உகாதி திருநாள் வாழ்த்து
எங்களுக்கு அதிகாரமும் இல்லை.. அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லை!: முதல்வர் வேதனை..!
எங்களுக்கு அதிகாரமும் இல்லை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லை என புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி வேதனையுடன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் புதுவை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பதும் அதில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புதுவை மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னரே தாக்கல் ஆகும் என்பதால் இது குறித்து முதல்வர் ரங்கசாமி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை மாநில அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தாலும் அந்த பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பின்னால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னரே தாக்கல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து முதல்வர் கூறிய போது மாநிலத்தில் என்ன பணிகள் நடக்கிறது என்று கூட அதிகாரிகள் சொல்வதில்லை, சில கோப்புகள் கூட அரசுக்கு வருவதில்லை எங்களுக்கு இன்னும் முழு அதிகாரம் இல்லை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லை மத்திய அரசிடம் வலியுறுத்யே சில பணிகளை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
