தொடர்புடைய செய்திகள்
- ஊக்கத்தொகை ரூ.1,000: திமுக அந்த வாக்குறுதியை முற்றிலுமாக மறந்து விட்டது- அண்ணாமலை
- பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000.! நாளை முதல் டோக்கன் விநியோகம்..!!
- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு!
- பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படுமா? முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு
- சென்சார் செய்யப்பட்ட அயலான் திரைப்படம்.. யார் யாரெல்லாம் பார்க்கலாம்?
பொங்கல் பரிசுத்தொகுப்பு: இன்று முதல் டோக்கன் வினியோகம்...! ரொக்கம் ரூ.1000 எப்போது?
தமிழக அரசு பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, வெல்லம் மற்றும் முழு கரும்பு தருவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த பொருட்கள் தருவதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் பச்சரிசி சர்க்கரை முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொங்கல் தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் பொங்கல் தொகுப்பு பொருள்களுக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படும் என்றும் அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் தரப்படுமா அல்லது ஆயிரம் ரூபாய் தனியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
