தொடர்புடைய செய்திகள்
- ஸ்டாலினைப்போல மிமிக்ரி – பிரச்சாரத்தில் தினகரன் செய்த லூட்டி !
- ரஜினி மூளை இல்லாத நடிகர்… மோடிதான் அவரது இயக்குனர் – சீமான் ஆவேசம் !
- தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை – பல்டிக்கு விளக்கமளித்த அய்யாக்கண்ணு !
- பின்பக்க வழியாக பதவிக்கு வருவதா? பொன்னாருக்கு வசந்தகுமார் கண்டனம்
- முதல்கட்ட வாக்குப்பதிவு: ஜனநாயக கடமையாற்ற தலைவர்கள் வேண்டுகோள்
மோடியிடம், எதிர்க்கட்சி தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும்: பொன்னார்
பிரதமர் நரேந்திர மோடியிடம், எதிர்க்கட்சி தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்கள் தொகுதியில் வெற்றி பெற தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொகுதி முழுவதும் சூறாவளி பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றார்.
இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட திருவட்டார் என்ற பகுதிகளில் அவர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் துணிச்சலான, தெளிவான முடிவுகளை எடுப்பதில் பிரதமர் நரேந்திர மோடியே வல்லவர் என்றும், அவரிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பொன்.ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
