1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Policeman killed by rain in Chennai

சென்னையில் மழைநீரில் மின்சாரம் தாக்கி காவலாளி பலி!

rain
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பெய்துள்ள கனமழையால் பல பகுதிகளில் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்சென்னை மந்தைவெளி பஸ் டிப்போ சிக்னல் அருகே தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் தாக்கி காவலாளி பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தேங்கிய மழைநீரில் நடந்துவந்தபோது அருகில் உள்ள மின்பெட்டியிலிருந்து மின்சாரம் கசிந்ததில் காவலாளி சக்திவேல் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 
அடுத்த கட்டுரையில்
உடல் நலத்துக்கு நல்லது காஃபியா டீயா? மிகப் பழைய விவாதத்துக்கு புதிய தகவல்கள்!