1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2023 (15:49 IST)

கருக்கா வினோத்தின் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை.. முக்கிய விவரங்கள் கிடைத்ததா?

ஆளுநர் மாளிகை வெளியே பெட்ரோல் வெடிகுண்டு வீசிய கருக்கா வினோத்தின் குடும்பத்தாரிடம் சென்னை போலீசார் விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையில் கருக்கா வினோத் தாயார் மற்றும் சகோதரரிடம் போலீசார் விசாரணை செய்ததாகவும், வினோத் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு யாருடன் தொடர்பில் இருந்தார் என்ற விவரங்களை கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால் கருக்கா வினோத் சிறையில் இருந்து வெளியே வந்ததும் சிறையில் வந்து பார்க்காததற்கு தங்களிடம் சண்டையிட்டதாகவும்,  தற்போது அவர் தொடர்பிலேயே இல்லை என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் நியாயமான விசாரணை நடக்கவில்லை என ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை என மீண்டும் ஆளுநர் மாளிகை X கணக்கில் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran