தொடர்புடைய செய்திகள்
- 11ம் வகுப்பு ரிசல்ட் ;12ம் வகுப்பு மறுதேர்வு ரிசல்ட் தேதி அறிவிப்பு! – பள்ளிக்கல்வித்துறை
- விவசாயிகளுக்கான உங்கள் குரல் ஒலிக்கட்டும்! – கார்த்திக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!
- தொடர் சிக்கலில் யூட்யூப் பிரபலங்கள்! – மதன் ரவிச்சந்திரன் மீது உதயநிதி வழக்கு!
- முதல்வர் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்தவர் தீக்குளிப்பு! - சென்னையில் பரபரப்பு!
- காக்க காக்க.. சுற்றுச்சூழல் காக்க..! – கார்த்தியை தொடர்ந்து களமிறங்கிய சூர்யா!
பாலியல் வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ கைது! – போலீஸார் அதிரடி
கன்னியாக்குமரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாக்குமரி அருகே உள்ள கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி சமீபத்தில் காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிறுமியை தேடி வந்தனர்.
சிறுமியை ஒருவழியாக கண்டுபிடித்த போலீஸார் அவரை குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டபோது நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் சிலர் சேர்ந்து இரண்டு ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் நாகர்கோவிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேனை அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை. இந்நிலையில் தலைமறைவாகியுள்ள நாஞ்சில் முருகேசனை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் போலீஸார் கைது செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக சிறுமியின் தாய் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
