தொடர்புடைய செய்திகள்
- மோடி அரசின் சிறுபான்மையின விரோத போக்கு- திருமாவளவன்
- அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி - பிரதமர் மோடி பெருமிதம்
- பிரதமர் மோடியின் அரசு பயத்தில் இருக்கிறது - காங்., தலைவர் கார்கே
- பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி- முதல்வர் விமர்சனம்
- மோடியின் உண்மை முகம் நாளை உலகுக்கு தெரியும்..? – தேர்தல் பத்திரம் குறித்து ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு!
அடுத்த பிரதமர் மோடியா? எடப்பாடியா? அதிமுகவினரின் அட்ராசிட்டி போஸ்டர்..!
அடுத்த பிரதமர் மோடியா? அல்லது எடப்பாடியா? என அதிமுக வினர் சிவகங்கையில் போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மோடியா? லேடியா? என ஜெயலலிதா முழக்கத்துடன் அதிமுகவினர் பிரச்சாரம் செய்த நிலையில் இந்த தேர்தலில் மோடியா? தீதியா? என மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய அதிமுக தற்போது திடீரென மோடியா? எடப்பாடியா? யார் பிரதமர் வேட்பாளர்? என போஸ்டர் அடித்து சிவகங்கை நகர் முழுவதும் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழர் உரிமையை காக்க, தமிழகம் காக்க, பாரத பிரதமராக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என்றும் எனவே இரட்டை இலையை சின்னத்தில் சிந்தித்து வாக்களிப்பீர் என்றும் அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது
Edited by Mahendran
