1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Perarivalan baroll extended for a month

பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோலை நீட்டிப்பு

உடல்நலக்குறைவு
உடல்நலக்குறைவால் பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோலை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைதண்டனை வசித்து வரும் 7 தமிழர்களில் ஒருவர் பேரறிவாளன் என்பது தெரிந்தது. அவரை விடுதலை செய்ய அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த 25 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பேரறிவாளனுக்கு பலமுறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பரோலில் இருக்கும் பேரறிவாளன் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால் பரோலை நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதை ஏற்று பேரறிவாளன் பரோலை மேலும் ஒருமாதம் நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash