1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 5 ஜூன் 2019 (15:26 IST)

டிவி பார்த்த மாணவி தூக்கில் தொங்கியதால் பரபரப்பு

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில்  பெற்றோர் கண்டித்ததால், வருத்தமுற்ற கல்லூரி மாணவி ஒருவர் தூக்கில் தொங்கினார். ஆனால் எடை தாங்காமல் கயிறு அறுந்ததால் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில்  உள்ள ஐஐடி வளாகத்தில்  18 வயது மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன்  வசித்துவருகிறார்.இவர்  ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று முந்தினம் தனது வீட்டில் அதிக நேரம் டிவி பார்த்ததாகத் தெரிகிறது.இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் வருத்தமுற்ற மாணவி தனது அறையைப் பூட்டிக்கொண்டார். 
 
அவரது சப்தம் கேட்காத பெற்றோர் உடனே பதறியடித்து கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது மாணவி கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அவரது எடை தாங்காமல் அக்கயிறு அறுந்து விழுந்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளதாகத் தெரிகிறது.
 
பின்னர் மாணவியைப் பெற்றோர்  தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.