தொடர்புடைய செய்திகள்
- பொங்கல் பரிசுக்கு பொங்கல் வைத்த நீதிமன்றம்: 1000 ரூபாய்க்கு ஆப்பு!!
- 3 ஏரியாக்களில் விஸ்வாசம் படத்திற்கு தடை: அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்
- உச்சநீதிமன்றத்தில் முக்கிய விசாரணை – தப்புமா எடப்பாடி அரசு ?
- ஆன்லைன் மருந்து வணிகத்தினை தடை செய்ய வேண்டும் : கரூரில் மருந்து வணிகர் நல சங்கத்தினர் ஆர்பாட்டம்
- முந்திரி ,திராட்சை… காகிதப்பார்சல் – வருகிறது பொங்கல் சிறப்புப் பரிசு
பிளாஸ்டிக் தடையால் மதுபாட்டிலில் டீ வாங்கும் முதியவர்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான கடைகளில் கேரிபேக் முதல் பல பிளாஸ்டிக் பொருட்கள் தற்போது பயன்படுத்துவதில்லை.
மேலும் பெரும்பாலான டீக்கடைகளில் பார்சல் டீ வாங்க பாத்திரம் கொண்டு வரும் வாடிக்கையாளர்களை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் பாத்திரம் இல்லாமல் பார்சல் டீ வாங்க வந்த ஒருவருக்கு மதுபாட்டிலில் டீ ஊற்றி கொடுக்கும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் டீக்கடைக்காரர் லாவகமாக மது பாட்டிலில் டீ ஊற்றி கொடுக்க அதை ஒரு முதியவர் மிகுந்த சந்தோஷத்துடன் வாங்கி செல்கிறார்.
அடுத்த கட்டுரையில்
