தொடர்புடைய செய்திகள்
- கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: பலியானோர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..!
- கள்ளச்சாராய வியாபாரிகளோடு திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்பு? விரிவான விசாரணை வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்!
- ஒரு சாராய பாட்டில் கூட இருக்கக் கூடாது.. கள்ளக்குறிச்சியை சல்லடை போடும் 1000 போலீஸ்படை!
- கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராய விவகாரம்: ஆர்ப்பாட்டம் அறிவித்த அண்ணாமலை..!
- விஷச்சாராய விவகாரம்: கள்ளக்குறிச்சி விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
காவல்துறையின் அலட்சியப் போக்கே காரணம்.. கள்ளக்குறிச்சி மரணத்திற்கு பா ரஞ்சித் கண்டனம்..!
தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கு தான் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்திற்கு காரணம் என இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்!
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!
மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
