1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. P.Chidambaram comment on sterlite issue

அரசாங்கத்தை யார் இயக்குகிறார்கள் என்பது புரிகிறதா? - ப.சிதம்பரம் காட்டம்

P. Chidambaram
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லை ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர். இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் “காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக. தமிழ்நாடு அரசை யார் நடத்துகிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும் “தூத்துக்குடி பெருந்துயரத்திற்கு யார் காரணம்? 1.சிந்தனையும் செயலும் இழந்த மாநில அரசு. 2. சீரிய தலைமையும் போதிய பயிற்சியும் இல்லாத காவல் துறை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு....