தொடர்புடைய செய்திகள்
- ஓபிஎஸ் பிரச்சாரத்திற்கு வர தேவையில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!
- ஈரோட்டில் தோல்வி அடைந்தால் அதிமுகவை ஓபிஎஸ் இடம் ஒப்படைக்க வேண்டும்: புகழேந்தி
- ஓபிஎஸ் - ஈபிஎஸ் சந்திப்பு நடக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை: ஜெயக்குமார் பேட்டி
- இன்று ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்த நாள்.. ஈபிஎஸ் உடன் சந்திப்பா?
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் எடுத்த அதிரடி முடிவு..!
இரண்டாவது தர்ம யுத்தம் தொடங்கிவிட்டது! – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில் இரண்டாவது தர்ம யுத்தம் நடப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் எழுந்துள்ள நிலையில் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, எதிர்தரப்பான ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார்.
ஆனால் கட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடக்கவில்லை என்றும், தங்களை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.
இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் “அதிமுகவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை நீக்க தொண்டர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அதிகாரம் இல்லை என்ற அடிப்படை விதியையே எம்.ஜி.ஆர்தான் வகுத்தார். ஆனால் கட்சியின் விதிகளை உடைத்து கட்சியை தன் இரும்பு பிடிக்குள் கொண்டு வர அவர்கள் நடத்திய நாடகம் தோல்வியில் முடிந்தது.
2026ம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் உள்ளது. தேர்தல் ஆணைய ஆவணங்களில் அப்படியே உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவின் சட்டவிதிகளை காப்பாற்ற தற்போது தர்ம யுத்தம் தொடங்கியுள்ளது” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K
