1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 9 ஜனவரி 2022 (16:57 IST)

நாளை முதல் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்ல புதிய கட்டுப்பாடு: கலெக்டர் அறிவிப்பு

வார இறுதி நாட்களான வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் நாளை முதல் மீண்டும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் என்பவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நாளை முதல் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
 
நாளை முதல் அதாவது ஜனவரி 10ம் தேதி முதல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கலெக்டர் பா முருகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்
 
இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.