1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nurses protest at chennai

சென்னையில் தொடரும் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்! போலீசார் பேச்சுவார்த்தை!

செவிலியர்கள்
சென்னையில் தொடரும் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்! போலீசார் பேச்சுவார்த்தை!
சென்னையில் கடந்த சில நாட்களாக ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த போராட்டம் தொடர்ந்து வருகிறது.
 
 கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் அதிகரித்ததை அடுத்து 2 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினர் 
 
இந்த ஒப்பந்தம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் பணி நீடிப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை நடத்தி வரும் நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
ஆனால் போலீசாரின் வேண்டுகோளையும் மீறி தற்போது ஒப்பந்த செவிலியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சீனாவுக்கு இலவச தடுப்பூசி கொடுக்க தயார்: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு!