1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 17 மே 2022 (16:58 IST)

குரூப் 2, 2ஏ தேர்வுக்கு காலை 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது: டி.என்.பி.எஸ்.சி தலைவர் அறிவிப்பு

tnpsc
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 தேர்வுகள் வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வுக்கு எட்டாம்பத்து 9 மணிக்குள் வரைதான் தேர்வர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் காலை 9 மணிக்கு மேல் வந்தால் தேர்வர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இந்த தேர்வை எழுத 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் ஆண்கள் 4.96 லட்சம் பேர்கள் என்றும் பெண்கள் 6.56 லட்சம் பேரும் மூன்றாம் பாலினத்தவர் 48 பேர் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஒரு பணியிடத்திற்கு 10 பேர் வீதம் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்