ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..
நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாகவே திமுகவுக்கு நெருக்கமாக இருக்கிறார்.. பாட்ஷா பட விழாவில் மேடையில் பேசிய ரஜினி ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என தைரியமாக பேசினார். தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக மிகவும் தைரியமாக பேசிய ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே
.
அதோடு தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தார் ரஜினி.. எனவே அதிமுக தோல்வியடைந்து திமுக வெற்றி பெற்றது.. அதன் பின் கலைஞர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவராக ரஜினி மாறினார். திமுக தொடர்பான விழாக்களில் தொடர்ந்து கலந்து கொண்டார்..
கலைஞரின் மறைவுக்கு பின் முக ஸ்டாலினிடமும் நெருக்கம் காட்டி வருகிறார் ரஜினி..
ரஜினியின் பிறந்தநாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து சொல்வதும், ஸ்டாலின் பிறந்தநாளுக்கு ரஜினி வாழ்த்து சொல்வதும், திமுகவின் முக்கிய விழாக்களில் ரஜினி கலந்து கொள்வதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், முக ஸ்டாலின் பற்றி கருத்து தெரிவித்துள்ள ரஜினி ஒரு தொண்டன், இளைஞர் அணி தலைவர் எம்எல்ஏ, மேயர், துணை முதல்வர் ஆகிய பணிகளில் இருந்து அதன்பின் மக்களுடைய ஆதரவுடன் முதலமைச்சராகியுள்ளார். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என சொல்வார்களே அப்படியே அப்படி அவருடைய சித்தாந்தத்தை எதிரா நிற்பவர்களையும் அவர் மதிக்கிறார்..
அதற்கு உதாரணம் சமீபத்தில் எச். ராஜா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரை நேரில் சென்று முக ஸ்டாலின் பார்த்தார். இத்தனைக்கும் ஸ்டாலினை மிகவும் கடுமையாக விமர்சித்தவர் எச்.ராஜா.. இது ஒரு தலைவருக்கான பண்பு. கண்ணியமான குணங்கள் அவரிடம் இருக்கு.. நட்புக்கு மரியாதை கொடுப்பவர்.. நண்பர்களை மிகவும் மதிப்பவர்.. ஸ்டாலினிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரின் ஒழுக்கம் மற்றும் அவரிடம் அணுகுமுறை என கூறியிருக்கிறார் ரஜினி.