1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 19 ஜனவரி 2021 (10:35 IST)

வேளாண் சட்ட நகலைக் கிழித்தெறிந்த புதுச்சேரி முதல்வர்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புகள் அதிகமாகியுள்ள நிலையில் அதைக் கிழித்துள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கூடிய புதுச்சேரி சட்டசபையில் இந்த மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்துள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.