தொடர்புடைய செய்திகள்
- பெண்களின் கர்ப்பக் காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பழங்கள்...!!
- மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டிகள்– 300 க்கும் மேற்பட்ட வில்லாளர்கள் பங்கேற்பு
- சாக்கடையில் வீசப்பட்ட ஐந்து மாச குழந்தை...கோவையில் பரபரப்பு
- ஆசையில் தொடங்கி கொலையில் முடிந்த கள்ளக்காதல்....
- ஸ்டுடியோவிற்குள் உல்லாசமாக இருப்போம்: தொழிலதிபர் பகீர் வாக்குமூலம்
கள்ளக் கணவருடன் மோதல்: குழந்தையை கயிற்றி இறுக்கி கொன்ற தாய்
கரூர் அருகே குடும்ப பிரச்சினைக்காக 3 வயது குழந்தையை கயிற்றால் இறுக்கி கொன்ற கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த பரளி என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் ரம்யா வயது 24. இவரது மகள் வேத வர்ஷினி வயது 3.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக திருச்சி மாவட்டம் கொளக்குடி பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா தனது கள்ளக்காதலன் மணிமாறன் உடன் தொடர்பில் இருந்ததால் கணவனை வெறுத்து மணிமாறன் உடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் வேதா வர்சினி.
ரம்யாவுக்கும் மணிமாறனுக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் மனமுடைந்த ரம்யா இன்று தனது மகள் வேதா வர்சினியை கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். மேலும் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இச்சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் ரம்யாவை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பெற்ற தாயே குழந்தையை கொன்ற விபரீதம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த கட்டுரையில்
