தொடர்புடைய செய்திகள்
- என்ன முடி இது..? ஒழுங்கா வெட்டிட்டு வா! திட்டிய பாட்டி! - சிறுவன் எடுத்த விபரீத முடிவு!
- வங்கிக்கடன் தவணை கேட்டு மிரட்டிய ஊழியர்: மதுரை வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி..!
- இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட கால கடன் பாக்கிகள் வசூல் ஆகும்!– இன்றைய ராசி பலன்கள்(17.09.2024)!
- புதுச்சேரி சிறுமி வன்கொடுமை குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை!
- தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்
கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!
கடன் தொல்லை காரணமாக மூன்று மகன்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்ய முயன்ற தாய் உள்பட நான்கு பேரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில், குழந்தைவேலு - உச்சிமாகாளி என்ற தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை குழந்தைவேலு வேலைக்கு சென்ற போது, உச்சிமாகாளி தனது மூன்று மகன்களுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷத்தை குடித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக நான்கு பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில், குழந்தைவேலு குடும்பத்தினருக்கு கடன் தொல்லை அதிகம் இருப்பதாகவும், கடன்காரர்கள் நெருக்குதல் கொடுப்பதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த உச்சிமாகாளி தனது மகன்களுக்கு விஷம் கொடுத்து தானும் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிய வருகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Edited by Mahendran
