1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 9 மே 2019 (20:45 IST)

குடும்பத்துடன் கொடைக்கானலில் ஓய்வெடுத்த மு.க. ஸ்டாலின்

தமிழக எதிர்கட்சி  தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மக்களவைப் பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்காக திவீரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் தற்போது குடும்பத்துடன் கொடைகானலில் ஓய்வெடுத்துவருகிறார்.
தமிழ்கத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவடைந்தநிலையில், வரும் 19 ஆம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
 
இந்த நான்கு தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு  ஆதரவாக வாக்கு சேகரித்து ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று ஒருநாள் பிரசாரத்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டு குடும்பத்தினருடன் கொடைக்கானலில் ஓய்வெடுத்தார்.
இன்று மாலையில் துணையியார் துர்கா ஸ்டாலின், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார் ஆகியோருடன் ஸ்டாலின் படகுசவாரி செய்து மகிழ்ந்தார்.