1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (14:44 IST)

பழங்குடி மக்களுக்கு 100% தடுப்பூசி செலுத்திய நீலகிரி மாவட்டம்! – ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யாவுக்கு விருது!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் பழங்குடி மக்களுக்கு முழுவதும் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த நீலகிரி மாவட்டத்திற்கு முதல்வர் விருது வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், பல இடங்களில் முகாம் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதன்முறையாக பழங்குடி மக்கள் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசியை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

இதற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யாவை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.