வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 நவம்பர் 2020 (12:54 IST)

அடித்து வெளுத்த மழை; ரெயின் கோட்டோடு புறப்பட்ட ஸ்டாலின்! – பாதிப்புகள் குறித்து ஆய்வு!

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில் மு.க.ஸ்டாலின் நேரடியாக கள ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் முன்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி விடியும் வரை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். பெரம்பூர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த அவர் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.