தொடர்புடைய செய்திகள்
- உயிரிழந்த விளையாட்டு வீரர் குடும்பத்திற்கு நிவாரணம்! – முதல்வர் அறிவிப்பு!
- கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை! – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
- உலக பாரம்பரிய சின்னங்கள் தினம்; மகாபலிபுரத்தில் அனுமதி இலவசம்!
- தமிழக இளம் டென்னிஸ் வீரர் விபத்தில் பலி! – முதல்வர் இரங்கல்!
- பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிக்குண்டு வீச்சு! – பாளையங்கோட்டையில் பரபரப்பு!
ஆளுனரோடு விரோதம் இல்லை.. இதுதான் காரணம்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
ஆளுனர் நடத்திய தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று ஆளுனர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நீட் விலக்கு மசோதாவை கிடப்பில் போட்டுள்ளதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்தன.
இந்நிலையில் இதுகுறித்து இன்று சட்டமன்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ”நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்முடிவு கிண்டி ஆளுனர் மாளிகையில் 210 நாட்களாக முடங்கி கிடக்கிறது. ஆளுனருடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை. எனக்கு கிடைக்கக்கூடிய பாராட்டை விட தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நன்மை, பலனே முக்கியமானது. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காதது தமிழக மக்களை அவமதிக்கும் செயல்” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
