1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 5 ஜூலை 2021 (17:08 IST)

புதிதாக பயன்பாட்டுக்கு வந்த அரசுப் பேருந்து.. ஓட்டிப்பார்த்த அமைச்சர்!

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக தொடங்க பட்ட புதிய பேருந்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள ஆனந்தாவாடி கிராமத்தில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக இன்று தொடங்கப்பட்டது. இதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது புதிய பேருந்தை அவர் சுமார் ஒரு கிலோமீட்டர் ஓட்டினார். அப்போது பேருந்தில் அரியலூர் எம் எல் ஏ சின்னப்பா மற்றும் பொதுமக்கள் பயணம் செய்தனர்.