1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (13:57 IST)

சாப்டர் பள்ளி விவகாரம்: மனிதாபிமானம் என்றால் என்ன என்று கேட்கும் நிலை உள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ்!

அண்மையில் நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் திடீரென கழிவறை சுவர் இடிந்து  3 மாணவர்கள் பலியாகினர். இந்த விவகாரம் தொடர்பாக நெல்லையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சு நடந்தது. இனி இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது அந்த கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து,  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ், சாப்டர் பள்ளி விவகாரத்தில் மனிதாபிமானம் என்றால் என்ன என்று கேட்கும் நிலை உள்ளது என கூறியுள்ளார். காரணம், உயிரிழந்த மாணவர்களை ஆசிரியர்கள் குச்சியை கொண்டு குத்தி உயிர் உள்ளதா? இல்லையா? என்று சோதித்துள்ளனர். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பள்ளி நிர்வாகம் இப்படி நடந்துள்ளது கண்டிக்கத்தக்கது.