தொடர்புடைய செய்திகள்
- தங்கம் விலை தொடர் சரிவு.. ஒரு சவரன் ரூ.70,000க்கும் கீழ் வந்துவிட்டதா?
- இன்று ஒரே நாளில் ரூ.1600க்கு மேல் குறைந்த தங்கம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!
- சென்னையில் 7 பேருந்துகளின் வழித்தட எண்கள் மாற்றம்.. முழு விவரங்கள்..!
- சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி அடைந்த சீசன்.. சிஎஸ்கேவின் மோசமான சாதனை..!
- போட்டியின் போக்கையே மாற்றிய சஹாலின் ஒரு ஓவர்…!
பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பு தெளிக்கப்பட்டதா? சென்னை மேயர் ப்ரியா விளக்கம்..!
சென்னையின் சில பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு தெளிக்கப்படுவதாக எழுந்த புகாருக்கு சென்னை மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு முன்பாக, அப்பகுதியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு தெளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, அந்த நிகழ்ச்சிக்கு வந்த மேயர் பிரியாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கும்போது, “சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்த ப்ளீச்சிங் பவுடரையே பயன்படுத்துகிறோம். புகார் குறித்தும், ப்ளீச்சிங் பவுடரின் தரம் குறித்தும் உரிய விசாரணை நடைபெறும்,” என தெரிவித்தார்.
ஏற்கனவே, சென்னையின் பல பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு தெளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதை முன்னிட்டு, மேயர் பிரியா உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran
