தொடர்புடைய செய்திகள்
- ஒரு ஆவின் பால் பாக்கெட்டுக்கு ரூ12 கொள்ளை அடிக்கின்றனர்: அண்ணாமலை ஆவேசம்..!
- மனோ தங்கராஜ் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு: அண்ணாமலை அறிவிப்பு
- மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; அமைச்சர் மனோ தங்கராஜ்
- 'பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'- அமைச்சர் மனோதங்கராஜுக்கு அண்ணாமலை சவால்
- நாளை முதல் பச்சை நிற ஆவின் பால் நிறுத்தம்.. இனி ஊதா நிற டிலைட் பால் மட்டுமே..!
இவ்வளவு தானா? பல வழக்குகளை பார்த்தவன் நான்: அண்ணாமலைக்கு மனோதங்கராஜ் பதிலடி..!
அமைச்சர் மனோ தங்கராஜ் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அண்ணாமலை கெடு விடுத்த நிலையில் இன்று காலை அண்ணாமலை, மனோ தங்கராஜ் மீது ஒரு கோடி ரூபாய்க்கான மாஷ்ட வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறினார்.
இந்த நிலையில் அவருக்கு பதிலடியாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
இவ்வளவு தானா!!!
தம்பி அண்ணாமலை, தாங்கள் கால்ச்சட்டை போடுவதற்கு முன்பே (1988) பேச்சிப்பாறை நீர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம், கனிம வள பாதுகாப்பு போராட்டம் என எத்தனையோ மக்கள் பிரச்சனைகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் நான் ஏறி இறங்கிய வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தம்பியின் மான நஷ்ட வழக்கை பார்த்து ஓடி ஒளியவா போகிறேன்?
ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த #வடநாட்டுகைக்கூலி_அண்ணாமலை என்று கூறுவது ஏனோ?
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
