வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 29 நவம்பர் 2022 (11:54 IST)

மெரினாவில் மாற்றுத்திறனாளி பாதையை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது: கமல்ஹாசன்

marina
சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு பாதை அமைக்கப் பட்டுள்ள நிலையில் அந்த பாதையில் மற்றவர்கள் செல்லக்கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.,
 
இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த பாதையை மாற்ற அவர்கள் செல்வதை தடுக்க உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளத். 
 
ஒரு சிறந்த நோக்கத்தோடு நோக்கத்தோடு போடப்பட்ட இந்த பாதை பழுதாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பொது மக்களும் இதை உணர்ந்து அந்த பாதையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மையம் கட்சி தெரிவித்துள்ளது
 
Edited by Siva