1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (11:43 IST)

அனிதா வீடியோவால் சர்ச்சை; புகாரால் வீடியோவை நீக்கிய மாஃபா பாண்டியராஜன்!

நீட் தேர்வு பிரச்சினையில் உயிரிழந்த அனிதா பேசுவதுபோல் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்ட வீடியோவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அவர் அந்த வீடியோவை நீக்கியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் அனைத்து விதமாகவும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா பேசுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டுள்ள டப்பிங் செய்யப்பட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் அனிதாவின் சகோதரர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளிக்கப்பட்ட சில நிமிடங்களில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அந்த வீடியோவை தனது ட்விட்டர் கணக்கிலிருந்து நீக்கியுள்ளார்.