1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (13:05 IST)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்… உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசுவேலை –ஸ்டாலின் உறுதி!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் பேரணி நடத்திய போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். சீருடை அணியாத போலீசார் மக்களை நோக்கி சுடும் வீடியோக்கள் வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என குரல்கள் எழுந்தன. ஆனால் இப்போது வரை வேலை வழஙக்ப்படவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சியில் அவர்களுகு உடனடியாக அரசு வேலை வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின்  பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார்.