1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 ஜூலை 2022 (19:42 IST)

தாலி கட்டினால் தான் ஜாமின்: நீதிபதி உத்தரவால் கோர்ட் வளாகத்தில் நடந்த திருமணம்!

marriage
தாலி காட்டினால்தான் ஜாமீன் என நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து கோர்ட் வளாகத்திலேயே திருமணம் நடந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வழக்கு தொடரப்பட்டது
 
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வேண்டும் என இளைஞர் மனு தாக்கல் செய்த நிலையில் காதலித்து கர்ப்பம் ஆக்கிய காதலியை திருமணம் செய்தால் உடனடியாக ஜாமீன் தருவதாக நீதிபதி நிபந்தனை விதித்தார்
 
இதனையடுத்து அந்த இளைஞர் அந்தப் பெண்ணின் கழுத்தில் தாலிகட்டி திருமணம் செய்தார். இதனையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது