1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Leo early morning case, judge order

லியோ அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு..!

லியோ
லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி அனிதா சுமந்த் அறிவித்துளார்.

அக்டோபர் 19ஆம் தேதி 6 காட்சிக்கு அனுமதி கேட்ட நிலையில், 5 காட்சிக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிறப்பு காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன எனவும், ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கை சென்னைக்கு மாற்றியது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிபதி அனிதா உத்தரவு பிறப்பித்து வழக்கின் விசாரணையை நாளை தள்ளிவைத்து உத்தரவிட்ட்டார்.

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நாட்டிலேயே ஊழல் அதிகம் செய்யும் கட்சி திமுக-மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்