செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 அக்டோபர் 2023 (08:16 IST)

குன்னூர் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள்.. சொந்த ஊரில் நல்லடக்கம்..!

குன்னூர் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
 
குன்னூர் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் சொந்து ஊருக்கு உடல்கள் கொண்டு வரப்பட்டன. தென்காசி மாவட்டம் கடையத்தில் வைத்துள்ள 9 பேரின் உடல்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். 
 
மேலும் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இறந்தவர்களின் உடல்கள் அவரவர் ஊர்களில் நல்லடக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. 
 
மேலும் இந்த விபத்தில் லேசான காயமடைந்தவர்கள், பேருந்து மூலம் ஊருக்கு அழைத்து வரப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva