வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (12:08 IST)

ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு சந்தை மூடல்! – மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில் சென்னையின் முக்கிய சந்தையாக கோயம்பேடு சந்தைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா அபாயத்தை கருத்தில் கொண்டு மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.