1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kidnapper Niravi Murugan again arrested by police

பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடி : கைது செய்த போலீஸார்!

Tamilnadu
தொழிலதிபர் கடத்தல் வழக்கில் காவலர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி நீராவி முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு பவானியை சேர்ந்த தொழிலதிபர் சக்திவேலை மர்ம கும்பல் 10 லட்சம் கேட்டு கடத்தியது. கடத்தி சென்ற மர்மகும்பலை நாமக்கல் வெண்ணந்தூர் அருகே அப்பகுதி போலீஸார் மடக்கி பிடித்தனர். அப்போது மர்ம கும்பல் காவலர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் தாக்கியும் தப்பி ஓடியது.

இந்த வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி நீராவி முருகன் வள்ளியூரில் வைத்து கைது செய்யப்பட்டார். ஆள்கடத்தல் வழக்கில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீராவி முருகனை துப்பாக்கி தாக்குதல் நடத்திய வழக்கில் வெண்னந்தூர் போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
விண்ணுக்கு செல்லவுள்ள இந்தியாவின் பெண் ரோபோ என்ன செய்யும்?