தொடர்புடைய செய்திகள்
- 40.86 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- மோடிக்கு குழந்தைகள் இல்லை... வாரிசு அரசியல் குறித்த பேச்சுக்கு லல்லு பதிலடி!
- சென்னையில் தைராய்டு கண் நோய் 25% அதிகரிப்பு - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை தகவல்!
- மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
- 40.61 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
தேங்காய் சில்லு தொண்டையில் சிக்கி உயிரிழந்த குழந்தை!
சென்னையை அடுத்த பொன்னேரி அருகே உள்ள பாக்கம் எனும் கிராமத்தில் குழந்தையின் தொண்டையில் தேங்காய் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
சென்னையை அடுத்துள்ள பொன்னேரி பகுதிக்கு அருகே பாக்கம் எனும் கிராமம் உள்ளது. அங்கு வசித்து வரும் வசந்த் என்பவருக்கு சஞ்சீஸ்வரன் என்ற 3 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று குழந்தை நேற்று வீட்டில் தேங்காய் சாப்பிட்டுள்ளது. அப்போது தேங்காய் சில்லு ஒன்று தொண்டையில் சிக்கிக் கொள்ளவே மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அதற்குள்ளாகவே குழந்தை இறந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
