1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (16:01 IST)

கொரோனா பரவல்: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் மீண்டும் 2 ஆயிரத்தைக் கடந்துள்ள   நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை செய்யவுள்ளார்.

உலதில் உள்ள சுமார் 110  நாடுகளில் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வருவதாக  ஐ. நாடுகள் சபை தலைவர் நேற்று அறிவித்தார்.

இந்தியாவிலும் தினந்தோறும் கொரொனாவால் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில்  2,069 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.  எனவே, கொரோனா தொற்றைத் தடுப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். மேலு, தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்து குறித்தும்  ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் உள்ளது.